14 வயதுச் சிறுமி வன்கொடுமை; 18 வயது இளைஞன், குடும்பத்தினரும் கைது.!

38

14 வயதுச் சிறுமியொருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில் சந்தேக நபர் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மீலும் தெரியவருகையில்,

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் வீட்டிற்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சந்தேகநபரான இளைஞனும் அவனது குடும்ப உறவினர்களும் சென்றுள்ளனர்.

இதன்போது சிறுமியின் வீட்டிலேயே வைத்து அந்த இளைஞன் 14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர், சந்தேகநபர் மற்றும் அவரது உறவினர்கள் தாங்கள் வசிக்கும் ஹம்பேகமுவ, வெலிஓயா பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஹம்பேகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வன்கொடுமைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரின் தாய், பாட்டி (அம்மம்மா/அப்பம்மா) மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தை ஆகிய நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார். அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.