முச்சக்கர வண்டி மீது பாரிய மரம்விழுந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி.!

13

இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.

மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.