ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான  98 கிலோ ஏலக்காய் கடத்தல்: இருவர் கைது.!!

86

கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான ஏலக்காயுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் 31ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விஜய கப்பல் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இடம்பெற்றது.

சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த டிங்கி படகை கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்ததில், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 98 கிலோகிராம் ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 41 வயதுடைய இரு நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஏலக்காய், டிங்கி படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படை தொடர்ந்து கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற கடத்தல் முயற்சிகள் மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.