விமான நிலைய வருகை முனையத்தில் கைதான நபர்.!

101

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 6 கிலோ 590 கிராம் குஷ் மற்றும் 4 கிலோ 910 கிராம் ஹஷீஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.