வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக புதிய திட்டங்கள் – அமைச்சர் சாவித்திரி உறுதி

150

வவுனியாவில் 7999 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளனர். அவர்களை மீள் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 7999 பெண் தலைமைத்துவ குடும்பங்களை கண்டறிந்துள்ளோம். கிட்டத்தட்ட 8000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 2026 ஆம் ஆண்டு எமது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மகளிர் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவவாறான வேலைததிட்டஙகளை எடுக்க முடியும் என கலந்துரையாடியுள்ளோம். அவர்களது வாழ்வாதரம், பாதுகாப்பு, பிள்ளைகளின் கல்வி உள்னிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

சிறுவர் பாதுகாப்பு, போதைப் பொருள் பாவனை, தொலைபேசி பாவனை பாதிப்பு குறித்தும் பேசியுள்ளோம். பாலியல் தீதியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

எமது அரசாங்கம் அரச அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு, நாம் வந்த காலத்தில் இருந்ததை விட எரிபொருள் விலை குறைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண குறைப்பு, டித்வா புயலின் பின் கூட எதிர் கட்சியினர் கூறும் விடயம் அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும். விலை கூடும். அபிவிருத்தி பணி இடமபெறாது என கூறினார்கள்.

ஆனால், ஒன்றும் நடக்காமல் தற்போது டித்வா போன்ற இயற்கை அனர்த்தத்தின் பின்னும் துரிதமாக மீள கட்டியெழுப்பப்பட்ட நாடுகளில் இலங்கை முதலிடம் பெறுகிறது. அதேபோல், இவ்வளவு காலமும் இருந்த அரசாங்கங்களை குறை சொல்வது எமது செயற்பாடல்ல. எஙகளது பதவி கிடைத்த பின்பு மககளது அன்றாட வாழ்வை கட்டி எழுப்புவதே எமது நோக்கம். எதிர்கட்சியினர் இதை பற்றி அவதூறு பரப்பிக் கொணடிருக்க முடியுமே தவிர எதுவும் செய்ய முடியாது.

மீனவர் பிரச்சனை ஜனாதிபதி தலைமையில் பேச்சுவாத்தை ஊடாக முன்னெடுக்க்பட்டுள்ள விடயம். ஆசிரியர் பிரச்சனை தொடர்பில் பேசி வேலைநிறுத்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளை வேலையில் இணைக்க நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது. 39000 பட்டதாரிகளுக்கு வேலை நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

வைத்திசாலைகளில் பற்றாக்குறையாக இருந்த மருந்துகள் துரிதமாக வழங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அபிவிருத்தி, பஸ் போக்குவரத்து, மகளிர் நடத்துனர், முன்பள்ளி மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு, முதியோர் கெடுப்பனவு, நோயாளி கொடுப்பனவு என்பனவும் அதிகரிக்கர்பட்டுள்ளது.

 

தமிழ, சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் பாகுபாடு இல்லாது நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாம் 100 வீதம் சரி என சொல்லவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. அதனை செய்வோம். பிரிவினைவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். அனைவரும் ஒன்றுமையாக வாழ முடியும்.

 

எதிர்கட்சியினர் தமது நோக்கத்தை முன்வைப்பதற்காக இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் என்பவற்றை தூக்கி வருகிறார்கள். சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள். எதிர் கட்சியினர் எமது அரசாங்கத்தை விட நல்லதொரு திட்டத்தை முன்வைத் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை கூறுங்கள். அப்படி வாருங்கள். இனவாதத்தை கையில் எடுக்க வேண்டாம் எனத் தொவித்தார்.