திருகோணமலையில் சற்று முன்னர் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு.!

171

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று(31.01.2026) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று மாலை 3.49 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.