இலவச கணினி வகுப்புக்கள். அரம்பித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை!

444

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இலவச தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பதோடும், அவர்களின் தொழிற்கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடும் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வகுப்புகளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.