வெளிநாடு செல்லவிருந்த தந்தைக்கு நேர்ந்த சோகம் – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து.!

146

கேகாலை–அவிசாவளை பிரதான வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், வெளிநாடு செல்ல தேவையான ஆவணங்களை தயார் செய்யும் பொருட்டு பயணித்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.