காவல் நிலையத்திலேயே துணிகரம் – இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.!

331

கம்பகா மாவட்டத்தின் பெம்முல்ல காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி அலுவலகத்தின் முன் ரூ. 50,000 இலஞ்சம் கொடுக்க முயன்ற ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (21) காலை 10.50 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெம்முல்ல காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் அளித்த புகாரின்படி, சாலையில் நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவை விட வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி, பதிவு செய்யாமல், சட்ட நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை திருப்பித் தருவதற்காக சந்தேக நபர் இந்தப் பணத்தை இலஞ்சமாக வழங்க முயன்றுள்ளார்.

சந்தேக நபர் கலகெடிஹேன பகுதியில் வசிக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.