கட்டுநாயக்கவில் காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பியோடியவர் கைது.!

39

கட்டுநாயக்க, தெவமொட்டாவ பகுதியில் காவல்துறை அதிகாரியொருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, தெவமொட்டாவ பகுதியில் இன்று பிற்பகல் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரியொருவரின் துப்பாக்கியை அபகரித்துள்ளார்.

பின்னர், அதன் மூலம், அங்கிருந்த காவல்துறை அதிகாரியொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தப்பியோடிய சந்தேகநபர் இன்று மாலை திவுலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், குறித்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.