300 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சம்பவம் செய்த சுந்தர், குல்தீப்

43

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முலன்பூரில் நடந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 564 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

மானவ் சுதர், பிரசித் கிருஷ்ணாவின் மிரட்டலான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணியை கரை சேர்க்க போராடிய ரஹ்மத் ஷா 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற ஆப்கான் அணி 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி ஃபாலோ-ஆன் ஆனது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியை வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் சரித்தனர். 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த ஆப்கானிஸ்தான் அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அடல் 42 ஓட்டங்களும், குர்பாஸ் 24 ஓட்டங்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் சுதர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.