பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து விபத்து.!!

142

பொகவந்தலாவையிலுள்ள பாடசாலையொன்றுக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கெம்பியன் பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சில மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.