1 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம் : கதறும் குடும்பம்.!

82

மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் திருகோணமலை மூதூர் ஷாபி நகர் பகுதியில் நேற்று (05)இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்தமையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைய காலங்களில் இலங்கையில் இவ்வாறான இறப்புக்கள் அதிகரித்து வருகின்றமை வருந்ததக்க விடயமாகும் நீர் நிலைகள் அன்மித்து இருக்கும் போது பெற்றோர்கள் பிள்ளைகளை அவதானமாக வைத்திருக்க வேண்டிய மிகவும் அவசியமானதாகும்.