ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்.

82

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பல் மேற்கு இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலில், வணிகக் கப்பல் போக்குவரத்து இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காக மாற்றப்படுவதை இந்தியா கண்டிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன. மேலும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என்றும் அதில் குறிப்பிடப்ட்டுள்ளது.