யாழ்ப்பாணத்தில் சோகம்! முதியவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு.!

116

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (1.2.2026) இடம்பெற்றுள்ளது. நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 96 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார்.

தனக்கு இவ்வளவு வயதாகியும் ஏன் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.