முதியவர் ஒருவர் கொலை: சந்தேகநபர் தலைமறைவு!

155

பல்லெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாந்துராகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு 60 வயதுடைய முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை திரட்டும் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.