மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!

192

மட்டக்களப்பு, ஆயத்தியமலை பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் 69 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புது மண்டபத்தடி முண்டாளமடு பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர், செவ்வாய்க்கிழமை (31) வயலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

வயலில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்த அவர், காவலுக்காக கூலி தொழிலும் செய்து வந்த நிலையில், குறித்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் அவரது சடலம் புதன்கிழமை (01) காலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆயத்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற காட்டு யானை தாக்குதல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.