பலத்த காற்று, மழையால் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் காயம்!!

135

பல்லேகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தெல்தெனிய–கண்டி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் உடனடியாக ‘சுவசெரிய’ நோயாளர் காவு வண்டியின் மூலம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட இந்த அனர்த்தம் சாலையில் பயணித்த மக்களுக்கு திடீர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் குறித்த பிரதான வீதியில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.