திருகோணமலையில் மீண்டும் காணமல் போன புத்தர் சிலை ; தீவிரமாகும் விசாரணை!!

145

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று நேற்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த 6 ஆம் திகதி அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்த நிலையில் மற்றுமொறு சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.