கொழும்பில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகொலை – இருவர் வைத்தியசாலையில்..!!

24

நவகமுவ, கொரத்தொட்ட மெனிக்கர வீதிப் பகுதியில் நேற்று (1) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்ற இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.