குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு: அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் ரகசியம்!

63

உலகின் அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத அவசியமான பொருளென்றால் அது உப்புதான். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று கூறுவார்கள், அதன்படி உப்பு இல்லாமல் எந்த உணவின் சுவையும் முழுமையடையாது. ஆனால் உப்பு என்பது உணவின் சுவையை மேம்படுத்த மட்டுமல்ல, உங்களின் அதிர்ஷ்டத்தையும் மேம்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உப்பு ஒரு சக்திவாய்ந்த ஆற்றலை உறிஞ்சும் பொருளாகும். நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்மறை ஆற்றலையும், மன அழுத்தத்தையும் எளிதில் ஈர்த்து விடுவோம், இது நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த சூழ்நிலையில் உங்களிடம் உள்ள எதிர்மறை ஆற்றலை விரட்ட உப்பை பயன்படுத்தலாம். நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பது பல்வேறு நன்மைகளை அளிக்கும். இந்த பதிவில் குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும் இன்றைய வேகமான உலகில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அனுபவிக்கும் மோசமான உணர்வுகள் மன அழுத்தம் மற்றும் பதட்டம்தான். வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீர் மற்றும் உப்பின் கலவையானது சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஆற்றல்களை ஒன்றிணைத்து, ஆற்றல்களை சமநிலைப்படுத்த உதவும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்போ அல்லது காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்போ உப்பு கலந்த நீரில் குளித்தால், அது உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தும். இது எரிச்சலைக் குறைத்து, உங்கள் கோபத்தைத் தணித்து, உங்களுக்கு மன அமைதியைத் தரும்.

அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, மக்கள் சுறுசுறுப்பாகவும், நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கும் வீட்டில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் நிறைந்திருக்கும். நீங்கள் உப்பு சேர்க்கப்பட்ட நீரில் குளிக்கும்போது, ​​உங்கள் தனிப்பட்ட ஆற்றல் அதிகரிக்கிறது. இது உங்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது, மேலும் தடைபட்டிருந்த திட்டங்கள் மீண்டும் முன்னேறத் தொடங்கும். இழந்த பணத்தை மீண்டும் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும், மேலும் வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும். இதன்மூலம் அதிர்ஷ்டம் வீட்டில் நிலைத்திருக்கும்.

கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் நாம் தினமும் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம், பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இதனால் நமக்கேத் தெரியாமல் மற்றவர்களின் எதிர்மறை ஆற்றலையோ அல்லது தீய எண்ணங்களையோ நாம் நம்முடன் அழைத்துச் செல்கிறோம். இந்த அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் உறிஞ்சும் அற்புதமான குணம் உப்புக்கு உண்டு. நீங்கள் உப்பு கலந்த நீரில் குளிக்கும்போது, ​​அது உங்கள் உடலைச் சூழ்ந்துள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கிவிடும்.

உடல் சோர்வை நீக்கும் இப்படி குளிப்பது ஆரோக்கியத்திலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். கல் உப்பில் தசை வலி மற்றும் உடல் இறுக்கத்தைப் போக்கும் தாதுக்கள் உள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, தூங்குவதற்கு முன் இந்த நீரில் குளித்தால், அன்றைய பகல் நேரச் சோர்வு நீங்கி, ஆழ்ந்த மற்றும் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவீர்கள். போதுமான தூக்கம் பெறுவது, அடுத்த நாள் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கவும், சிறப்பாக செயல்படவும் உதவும்.ராகுவின் எதிர்மறை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒருவர் ராகுவின் வலுவான தாக்கத்திற்கு ஆளானால், அவர்கள் தேவையற்ற பயம், குழப்பம் மற்றும் தங்கள் பணிகளில் தடைகளை எதிர்கொள்வார்கள். இந்த நிழல் கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதில் உப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உப்பு கலந்த நீரில் குளிப்பது கிரக நிலைகளை மேம்படுத்துகிறது, மேலும் உங்கள் வாழ்க்கையில் ராகுவால் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.