குறைந்த வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் மக்கள்!!

108

ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக விலை அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 14,400 ஆகவும் சவரன், ரூ.1,15,200 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, 14,560 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,280 அதிகரித்து, 1,16,480 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ.280.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,80,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.4,37,440 அதுவே கிராமிற்கு ரூ.54,680க்கு விற்கப்படுகின்றது.

மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 4,01,040க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 50,130க்கு விற்கப்படுகின்றது. இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 818.29 LKR என்றும் ஒரு அவுன்ஸ 25,451.55 LKR என்று விற்பனை ஆகின்றது.