இலவசச் செயற்கை கருத்தரிப்புத் திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்!

149

நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது .

இந்நிலையில் இலவச சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டவுடன், வயது, உடல் நிலைமைகளின் அடிப்படையில், முன்னுரிமை வழங்கப்பட்டு, செயற்கை கருதரிப்புக்கான சிகிச்சை முன்னெடுக்கப்படும் என விசேட மருத்துவ நிபுணர் கமல் செனவிரத்ன கூறியுள்ளார்.