இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை!!

152

நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தற்போது பச்சை மிளகாய் சந்தையில் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் நாட்டில் பச்சைமிளகாய் விலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.