அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

126

ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று காமெனெயின் சகோதரிகளில் ஒருவரின் மகனான மக்மூத் மொராத்கானி, வடக்கு பிரான்சிலுள்ள தனது இல்லத்திலிருந்து தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இது ஒரு முன்னேற்றமான படி, ஒரு நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

போர் மற்றும் இராணுவ தலையீடுகள் அரசியல் செயல்முறையை சற்றே மந்தமாக்குகின்றன; அது வருத்தத்திற்குரியது. ஆனால் இந்த கட்டத்தை நாமே கடந்து செல்ல வேண்டியிருந்திருக்கலாம்,” என்று மொராத்கானி குறிப்பிட்டுள்ளார்.

காமெனெய் உயிரிழந்ததையடுத்து தற்போதைய ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.

அரசாங்கத்தின் உள் போட்டிகள் மிகுந்துள்ளன. அவற்றை எதிர்த்து நிலைத்திருக்க முடியாது. இறுதியில் அது மறைந்து, அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும்என்று அவர் தெரிவித்துள்ளார்.