வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி பலி – எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்.!

109

எம்பிலிப்பிட்டிய – குட்டிகல பகுதியில் உள்ள கச்சிகல வாவியில் நீராடச் சென்ற நிலையில், இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 60 மற்றும் 78 வயதுடைய இரு ஆண்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கிய இவர்களை மீட்க முடியாமல் போனதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் குட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.